கணவனை விரட்டிவிட்டு வெட்கமே இல்லாமல் மூன்று வாலிபர்களுடன் சல்லாபம் அனுபவித்த பெண் : தட்டிக் கேட்ட கள்ளக் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

0
81

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று பாலத்திற்கு அடியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று விசாரித்த போது அந்த வாலிபரின் பெயர் சுனில் என்று தெரியவந்தது.

அந்த வாலிபர் சுனில் காட்பாடி பகுதியில் உள்ள பிரபல ரௌடி என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். போலீசார் மோப்ப நாயை வர வைத்து சோதனை செய்த போது அது அங்கு அருகில் உள்ள பூட்டிய வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளது.

அங்கு யாரும் இல்லாததாலும் சந்தேகம் அதிகமானதால் போலீசார் பூட்டை உடைத்து சோதனை செய்து பார்த்தனர். அந்த வீட்டில் உள்ள பாத்திரங்கள் சிதறி கிடந்தன, அதோடு ஆங்காங்கே ரத்தம் வழிந்து கிடந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பெண் கோகிலாவின் முழு விபரங்களையும் காவல்துறையினர் விசாரித்து தெரிந்து கொண்டனர். மேலும் அந்த பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த மூன்று பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அதில் கோகிலாவுடன் தொடர்பில் இருந்தது ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், வேலை தேடி வந்த இப்ராஹிம் மற்றும் ரௌடி சுனில் ஆவர். மேலும் சம்பவம் நடந்த தினத்தில் கொகிலாவை தொலைபேசியில் அதிகம் தொடர்பு கொண்டது சுனில் என்று தெரிந்தது.

இதற்கிடையில் கோகிலாவின் கணவன் மனைவியின் செய்கை பிடிக்காமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். தனது தந்தையுடன் வசித்து வந்த கோகிலா இந்த மூன்று வாலிபர்களை தவிர மேலும் சிலருடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சுனில் கோகிலாவின் காம லீலைகளை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவரின் வீட்டிற்கு சென்று நேரடியாக சண்டை போட்டுள்ளார். அங்கு நடந்த பிரச்சினையில் சுனில் அசந்த நேரம் பார்த்து கோகிலாவும் அவரது தந்தையும் சரமாரியாக வெட்டி கொன்றனர்.

அதன் பிறகு சுனிலின் சடலத்தை இழுத்து சென்று பாலாற்றின் பாலத்திற்கு அடியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவு ஆனதாக தெரிகிறது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தலைமறைவான கோகிலாவையும் அவரது தந்தையையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
Parthipan K