பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

0
135

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களிடம் தனிமையில் இருந்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ராஜிவ் என்னும் காமுகன். சென்ற முறை நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவனால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் வடு மறைவதற்குள் புதிதாக ஒருவன் முளைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு  குழித்துறையைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் குளச்சலை சேர்ந்த சுதா ( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) என அடுத்தடுத்து இரண்டு பெண்கள் மேல்புறத்தைச் சார்ந்த ராஜீவ் என்பவன் தங்களை திருமணம் செய்வதாக கூறி அனுபவித்து விட்டு  தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோக்களை காட்டி  தன்னை விட்டு பிரிந்து செல்லுங்கள் இல்லையெனில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டுவதாக புகார் அளித்தனர்.

இது பற்றி மஞ்சுளா கூறும் பொழுது 2014 இல் ஜஸ்டின் என்பவரோடு திருமணம் நடைபெற்று பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து ஒரு வயதான தம்பதியினரை கவனித்துக் கொண்டு தனியாக அந்த வீட்டில் வாழ்ந்து வந்தேன். அப்போது ஒரு நாள் எனது செல்போனுக்கு மூன்று முறை மிஸ்டுகால் வந்துள்ளது. அதை தொடர்பு கொண்ட போது ராஜீவ் என்பவர் வேறொருவர் எண்ணுக்கு அழைப்பதற்கு பதிலாக உங்களுக்கு வந்து விட்டது எனக்கூறி உரையாடலை தொடர்ந்து உங்கள் குரல் இனிமையாக உள்ளது நீங்கள் பாட்டு டீச்சரா? என மயக்கி என் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு ஆறுதலாக பேச ஆரம்பித்தான். அடுத்து தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் உங்களைப் போன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தருவது எனது லட்சியம் என்று கூறி அவரின் வலையில் வீழ்த்தினார்.

பின்னர் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் பொழுது வீடியோ எடுத்தார். அதை தடுத்ததற்கு நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என் மனைவியின் அழகான உடம்பை நான் எப்போதும் பார்த்து ரசிக்கணும் எனக் கூறி போட்டோவும் வீடியோவும் எடுத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் என்னிடம் இருந்த 15 பவுன் நகையையும் பறித்துக் கொண்டார். இதனை அடுத்து வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும் உன்னை போன்ற ஒரு பெண்ணை வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே எங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன். பின் உன்னுடன் வந்து குடும்பம் நடத்துகிறேன். அதுவரை கொஞ்ச நாள் பிரிந்து இருப்போம் எனக் கூறினான். அதற்கு நான் சம்மதிக்காததால் தனிமையில் இருக்கும் பொழுது எடுத்த வீடியோக்களை காட்டி என்னை துரத்துவதற்கு மிரட்டி வருகிறான்.

இது எடுத்து ராஜிவை பற்றி பல்வேறு புகார்கள் என் காதுக்கு வரத் தொடங்கியது. என் உறவுக்கார பெண்ணின் போன் நம்பரை முகநூலில் இருந்து எடுத்து அவரை தொடர்பு கொண்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் வாழ்ந்து விட்டு கழட்டி விட்டுள்ளார்.பெண்களை ஏமாற்றி தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

சுதாவும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். ராஜீவ் முகநூலில் இருந்து எனது நம்பரை திருடி மிஸ்டுகால் கொடுத்து என்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி அவரின் ஆறுதலான பேச்சினால் மயங்கி அவரிடம் என்னை இழந்தேன். நாங்கள் தனிமையில் இருக்கும் பொழுது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். என்னிடமிருந்த நகை, பணம் அனைத்தையும் அவரிடம் இழந்து விட்டேன். மெல்ல மெல்ல எனது தொடர்புகளை குறைத்துக் கொண்டதால் சந்தேகம் அடைந்து அவரின் போனை ஆராய்ந்ததில் என்னைப் போன்று பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களை தனித்தனி போல்டர் போட்டு பதிவு செய்து வைத்திருந்தார்.

நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவரிடம் கேட்டதற்கு கணவனை இழந்த பெண்கள் ஈஸியா விழவும் செய்வாங்க. அவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்வது அதீத பிரியம். சொகுசா செலவு செய்ய பணம் கறக்கவும் முடியும். ஏதாவது வம்பு பண்ணினால் உனது அந்தரங்கத்தை இந்த உலகமே பார்க்கும்படி செய்து விடுவேன் என மிரட்டினார்.

இது குறித்து தனிப்படை அமைத்த போலீசார் விசாரணை நடத்தி கூறுகையில் காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் புகார் கொடுத்த தகவலை ரகசியமாக வைத்திருந்தோம். அதேபோல் ராஜுவால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.