அருள்மிகு கோட்டை பெருமாள் திருக்கோவில்!

0
129

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்ற 1500 வருடங்கள் பழமை வாய்ந்த அழகிரிநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க வைணவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்புமிக்க கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் இதற்கு ஏற்றவாறு கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

பண்டை காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோவிலுக்கு முன்பு மணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில் இதன் சிற்பக்கலைகளுக்காக பெரிதும் அறியப்படுகிறது.

இந்த கோவில் அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோவில்கள் சூழ அமைந்துள்ளது.

மணிமுக்தா ஆற்றில் நீராடி பெருமாளை நாள்தோறும் விட்டு வந்தால் துயரங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது ஐதீகம் என்கிறார்கள் பட்டாச்சாரியார்கள்.

அதிகம் காலத்தில் சமஸ்கிருத மொழி கொங்கு மண்டலத்தில் கோலோச்சி இருந்தது. சௌந்தரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அழகு ராஜன் என்ற பெயர் இருக்கிறது என சொல்கிறார்கள்.

மலை சூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்தரராஜன் தான் தற்காலத்தில் தமிழகத்தில் அழகிரிநாதர் என்றழைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

அழகிரி நாதருக்கு பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி இருக்கிறது. தென்மேற்கு மூலையில் சோழர்களை எழுதிய மதுரை மன்னன் சுந்தரபாண்டியன் வெற்றி தொடர்பான கல்வெட்டு இருக்கிறது.

அதில் சேர, சோழ, பாண்டியர், காலங்களில் கோவில் சீரமைக்கப்பட்ட வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் வரலாற்று காலத்தில் இருந்து உருவத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

உருவத்தில் பெரியதாக இருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் முதலாவதாகவும், இரண்டாவதாக கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரும், மூன்றாவதாக சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவில் ஆஞ்சநேயரும், குறிப்பிடப்படுகிறார்கள்.

இந்தக் கோவிலில் மூலவர் அழகிரிநாதர் அருகில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, வந்திருக்கிறார்கள். இதை தவிர மூலவரைச் சுற்றி சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசாமி, சன்னதிகள் இருக்கின்றன. வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

தேரோட்டத்தின்போது சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் பவித்திர உற்சவம். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா, பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம், இங்கே கலைகட்டும் என்கிறார்கள்.

இதை தவிர்த்து புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் மூலவர் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்கள். பக்தர்கள் உட்பட பல வகையான பிரசாதமாக வழங்கி வருகிறார்கள்.

இதை தவிர்த்து முக்கிய திருவிழா தலங்களில் உற்சவர் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோவிலாகும்.

இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சி அளிப்பதால் திருமணமாகாத ஆண் பெண் உள்ளிட்டோர் கோட்டை அழகிரி நாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும் .குழந்தைப்பேறு நோய்நொடி இல்லாமல் வாழ்வில் வளமும். பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாக அழகிரிநாதர் வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பல்வேறு திருவிழாக்கள் இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி பெருவிழா. இந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வது தொடர்பாக வந்து செல்கின்றன.

பிரம்மோற்சவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம், உள்ளிட்ட விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பிரத்தியேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு ஆண்டாள் அம்மையாருக்கு சூட்டப்படுகிறது. இவ்விழா காலங்களில் சேலம் நகருக்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பக்தகோடிகள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

சேலத்தில் உள்ள வைணவக் கோவில்கள் அனைத்திற்கும் அருமையாக கருதப்படுவது கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில்.

இந்த கோவிலை சுற்றி செவ்வாய்பேட்டையில் பாண்டு ரங்க நாதர் கோவில், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், ஆனந்தா இறக்கத்தில் லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவில், பட்டை கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கடைவீதியில் வேணுகோபால சுவாமி கோவில், சிங்க மெத்தையில் சௌந்தரராஜ பெருமாள் கோவில், நாம மலையில் சீனிவாச பெருமாள் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், என்றும் திரும்பிய திசையெல்லாம் கோவிலில் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாக கருதப்படுகிறது.