தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

0
77

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்

இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் செய்ய கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த முடிவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தமிழர் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2009-ம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது இனப்படுகொலை நடைபெறவில்லை என்று அறிவித்தவர் முத்தையா முரளிதரன் என்பதால் அவர் தமிழராக இருந்தாலும் அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் பகுதியில் ஆளுநராக அவரை நியமனம் செய்யக்கூடாது என்று தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் வட கிழக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நேயமிக்க கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே கோத்தபயா ராஜபக்சே அதிபராகி உள்ளது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் ஆளுநராக இருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

author avatar
CineDesk