மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

0
55
சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி தாமதம் ஆனது. 2 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் கடந்த 4-ந்தேதியில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் அதில் இருந்து முற்றிலும் குணமடைந்து உள்ளார்.
இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மீண்டும் இணைந்து  கொண்டார். கொரோனா பாதிப்புக்கு பிறகு 2 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைக்கு பிறகு தீபக் சாஹகருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான நெகடிவ் முடிவு வந்துள்ளது.
author avatar
Parthipan K