விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி

0
70

விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி

கேரள மாநில சொகுசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான 20 பேருக்கும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னரே இறந்து விட்டார்கள் என்று இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து விட்டதாகவும் விபத்து நடந்த அடுத்த நொடியே முன்பகுதியில் உட்கார்ந்திருந்த 20 பேரும் பலியாகி விட்டதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி டிரைவர் லாரியை ஓட்டி கொண்டிருக்கும் போது தூங்கியதே காரணம் என்றும் தலைமறைவாகியுள்ள அவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
CineDesk