அரசு பேருந்தை திருடி சொந்த மாநிலம் செல்ல முயன்ற வாலிபர்!

0
84

கொரோனா ஊரடங்கால் மாநிலங்களிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் சொந்த ஊர் செல்ல பல்வேறு யுக்திகளை மக்கள் கையாண்டு வருகின்றனர்.

இதில் கர்நாடாகவை சேர்ந்து ஓர் இளைஞர் செய்தது தான் உச்சபட்சம்.

ர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞர் ஆந்திர மாநிலம் அனந்தபூருக்கு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதற்க்கு முன் வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஊரடங்கினால் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தவர் அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடி அதை ஓட்டி கொண்டு தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அனந்தபுரத்தில் உள்ள கியா கார் தொழிற்சாலை அருகே பேருந்தை மடக்கிய சிக்கப்பள்ளி காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரனையின் போது
ஊரடங்கு அமல் படுத்துவதற்க்கு முன்பு அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காரணமாக ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தாகவும் கூறியவன், அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்ததாகவும் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளான்.

author avatar
Parthipan K