ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

0
92

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் ’தலைவி’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகைப்படத்தை பாலிவுட் பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

ஜெயலலிதா கேரக்டரில் நடிப்பதற்காக பயிற்சி பெற்றுள்ள கங்கனா ரனாவத் அவரது நினைவு நாளில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தியது சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk