கருடாழ்வாரை வணங்குவதின் பலன்கள்!

0
123

வைணவ கோவில்களில் கருடக்கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருட பெருமானை தரிசனம் செய்த பின்னர்தான் பெருமாளையும். தாயாரையும், தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வார் பிறந்தார் ஆகவே சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார் என்று சொல்லப்படுகிறது.

குழந்தை பாக்கியம் ஏற்படும், கோவில்களில் பல முக்கியத் திருவிழாக்கள் நடைபெறும் போது மேலே கருடாழ்வார் பறப்பதை பார்த்திருப்பீர்கள் சாப்பிடும்போது தரிசனம் கொண்டிருக்கும்போது கைகூப்பி வணங்க தேவையில்லை. மனதுக்குள் கருடன் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதுமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும் நாம் எடுத்த செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும் கருடனின் பார்வைக்கு கண்திருஷ்டி என்று பெயர் இருக்கிறது. அந்த பார்வை பார்த்தால் உங்களை எந்த தீய சக்திகளும். திருஷ்டிகளும், தீய விளைவுகளும் நெருங்காது.

ஆகவே கருடனை பார்த்தால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள் ஒவ்வொரு நாள் கருட சேவைக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் கருடாழ்வாரை சந்திக்கும்போது வழிபட்டால் நோய், செய்த பாவங்கள், மனக்குழப்பங்கள், உள்ளிட்டவை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல திங்கள் மற்றும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட்டால் பெண்களுக்கு அழகு ஏற்படும் பகை விலகும், குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

புதன் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் இவரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பகைவர்கள் வைத்த சூனியம் அகலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட்டால் ஆயுள் தீர்க்கம் பெறும். எந்த விஷயத்திலும் துணிச்சல் ஏற்படும் தன்னம்பிக்கை ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் அதிகரிக்கும்.

புரட்டாசி மாதம் தமிழ் நாடு முழுவதும் உள்ள வைணவ தலங்களில் கருட சேவை நடைபெறும் அன்றைய தினம் கருடசேவை வழிபாடு செய்தால் பெருமாளின் கருணை பார்வை நம் மீது திரும்பும் ஆகவே புரட்டாசி கருட சேவைகள் உள்ளிட்டவற்றை யாரும் தவற விட்டுவிடாதீர்கள்.