டோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?

0
71

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. முதல் நாளில் பளுத்தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு மட்டுமே வெள்ளிப் பதக்கம் வென்று எடுத்தார் .அந்த ஒரு பதக்கம் மட்டுமே இந்தியாவிற்கு இதுவரையில் கிடைத்திருக்கிறது. பதக்கப்பட்டியலில் 51 ஆவது இடத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது இந்தியா. அநேக வீரர் வீராங்கனைகள் முதல் அல்லது இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார்கள். ஆனால் ஓரிரு தினங்களாக இந்தியாவிற்கு பதக்கம் கிடைப்பதற்கான அறிகுறிகள் இருந்தனர்.

அதாவது பேட்மின்டன் போட்டியில் பிவி சிந்து லீக் சுற்றுகளில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்றைய தினம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றால் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார். இன்னொரு புறம் குத்துச்சண்டை மிடில் பிரிவில் காலிறுதியில் மிகவும் அட்டகாசமாக வெற்றியைத் தட்டிச் செல்வார்கள் மூலம் வெண்கல பதக்கத்தை வென்று விடுவார் என்ற செய்திகள் வந்துகொண்டே இருந்தது. இந்தியர்களுக்கு உற்சாகமாக அமைந்தது. இந்த செய்திகள் தற்சமயம் வட்டு எறிதலில் கமல் ப்ரீத் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார்.

பி பிரிவில் இடம் பெற்ற கமல் பிரீ தகுதி சுற்றில் அதிக பட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்தார். இதன் மூலமாக நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதியில் நடக்கும் மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் நிச்சயமாக இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 12 வீராங்கனைகள் இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன வீராங்கனை துணியா 6.57 மீட்டர் மட்டுமே எரிந்து 6-ஆம் இடத்தைப் பிடித்து தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறார்.