இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

0
83

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இன்றைய உள்ள இளைய தலைமுறைகள் அதிகளவு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதனை தடுப்பதற்காக  எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை காணலாம்.

முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும். இரண்டாவது பிரண்டை இவை உடல் நரம்புகளை வலுப்படுத்த உதவுகின்றது. பிரண்டை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்பில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

மூன்றாவதாக மாதுளை. நரம்பு மண்டலம் அதிகரிக்க இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாதுளை பழம் உண்டு வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு நரம்புகள் வலுப்படும். நான்காவது நெல்லிக்காய் .இவை உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஐந்தாவதாக வெற்றிலை இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட பசி அதிகரிக்கவும்.

author avatar
Parthipan K