3 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு முதல் மூட்டுவலி வரை அனைத்தும் நிவர்த்தியாகும்!

0
141
#image_title
3 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு முதல் மூட்டுவலி வரை அனைத்தும் நிவர்த்தியாகும்!!
மூன்று நாட்கள் தேனில் ஊறவைக்கப்பட்ட எள்ளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மூன்று நாட்கள் வரை தேனில் ஊறவைக்கப்பட்ட எள்ளை நாம் சாப்பிடும் பொழுது இரத்த சோகை பிரச்சனை, மூட்டு வலி, கால்சியம் குறைபாடு பிரச்சனை, உடல் சோர்வு, எலும்பு தொடர்பான பிரச்சனை, முடி உதிர்வு, தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் சரியாகும். இந்த பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் இன்னும் பல பிரசசனைகள் குணமாகும்.
எள்ளை எவ்வாறு தேனில் ஊற வைப்பது…
முதலில் ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சில்வர் பொருள் கூட பயன்படுத்தலாம். இந்த கண்ணாடி பாட்டிலில் 4 ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் அதே அளவு நான்கு ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஈரம் இல்லாத ஸ்பூன் ஒன்றை எடுத்து இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பாட்டிலை நன்கு மூடிக் கொள்ள வேண்டும். இதை அப்படியே மூன்று நாட்கள் ஊற வைக்க வேண்டும். எள்ளானது நன்கு ஊறினால் தேனின் மேல் வந்து மிதக்கும்.
தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை எவ்வாறு சாப்பிடுவது…
மூன்று நாட்கள் ஊற வைக்கப்பட்ட எள்ளை தினமும் 5 கிராம் சாப்பிடலாம். தினமும் காலை நேரத்தில் சாப்பிட்ட பிறகு அரை மணிநேரம் கழித்து இந்த தேன் எள்ளை சாப்பிடலாம். அல்லது மதிய வேலையில் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து இந்த தேன் எள்ளை சாப்பிடலாம். மாலை நேரத்தில் சாப்பிடலாம். காலை 11 மணியளவில் சாப்பிடலாம். ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன்பு சாப்பிடக்கூடாது. அது மாதிரியே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை கர்ப்பம் தறிக்க முயற்சி செய்பவர்கள் சாப்பிடக்கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது.
தேனில் ஊறவைக்கப்பட்ட எள்ளை சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான இரும்புச் சத்துகள், கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் எலும்பு பலவீனம் அடையாது. மேலும் உடல் சோர்வு, உடல் வலிகள் இருக்காது.
* இந்த தேனில் ஊறவைக்கப்பட்ட எள்ளை சாப்பிடும் பொழுது முதுமையை தள்ளிப்போட்டு எப்பொழுதும் இளமையாக இருக்க உதவுகின்றது. மேலும் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களையும் குணப்படுத்தும்.
* இந்த எள்ளை சாப்பிடும் பொழுது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் சருமம் நெகிழ்வுத் தன்மை அடைந்து சருமம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் என்பதற்காக அதிக அளவு சாப்பிட்டால் இது வயிற்றுப் போக்கு பிரச்சனையை உருவாக்கி விடும்.
* இந்த எள்ளில் செம்பு சத்துகள் இருப்பதால் இது இரத்தத்தில் பிராணவாயுவை ஏற்படுத்தி உடல் முழுவதும் தேவையான சத்துக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றது.
* போதைப் பழக்கம் உள்ளவர்களும் இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை சாப்பிடும் பொழுது அவர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடவும் உதவி செய்கின்றது.
* இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை சாப்பிடும் பொழுது மூளை புத்துணர்சசி பெறும். மூளையில் உள்ள நரம்புகள் இருக்கங்கள் எல்லாம் தளர்ந்து மூளை புத்துணர்ச்சி அடையும்.
* வயதானவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். அப்பொழுது அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனையை நீக்க வயதானவர்களுக்கும் இந்த எள்ளை சாப்பிடும்பொழுது இந்த பிரச்சனை குணமாகின்றது.
* எள்ளில் இருக்கும் மெக்னீசிய சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.
* முக்கியமாக இந்த எள் நம் உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரித்து கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது. இந்த எள்ளில் இருக்கும் ஃபைட்டோ செரால்ட் என்ற சத்து கெட்ட கொழுப்புகளின் உற்பத்தியை குறைக்கின்றது. மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது.
* எள்ளில் உள்ள ஜிங்க் சத்து உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. அது மட்டுமில்லாமல் புற்று நோய் செல்கள் உருவாவதையும் தடுக்கின்றது.
* எள்ளில் இருந்து நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியும். இந்த நல்லெண்ணெயை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது இது நம் இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
* இந்த எள்ளில் பைட்டிக் அமிலம், மெக்னீசியம், பைட்டோ செரால்ட் சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து நமக்கு புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
* இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட வெள்ளை எள்ளில் இருக்கும் சத்துக்களை விட கருப்பு எள்ளில் அதிக சத்துக்கள் உள்ளது. கருப்பு எள்ளையும் இதே முறையில் தேனில் ஊறவைத்து பயன்படுத்தலாம். கருப்பு எள் எடுக்கும் பொழுது இந்த கருப்பு எள்ளை ஒரு முறை வறுத்துவிட்டு ஆறவக்க வேண்டும். ஆறிய பிறகு இந்த கருப்பு எள்ளை நாம் பயன்படுத்தலாம்.
* இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படு இருப்பார்கள். இந்த இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கருப்பு எள்ளை பயன்படுத்தும் பொழுது இரத்தசோகை நோய் குணமடையும்.
* இன்றைய காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. முடிஉதிர்தல் பிரச்சனை உள்ள அனைவரும் இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட  எள்ளை சாப்பிடும் பொழுது முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும். இளநரையை தள்ளிப் போடும்.
* இந்த எள்ளில் இருந்து தயாராக்கப்படும் நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் வலி, முடி உதிர்தல், சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
* இந்த தேனில் ஊற வைக்கப்பட்ட எள்ளை ஒரு மாதம் வரை வைத்து நீங்கள் பயன்படுத்தலாம். இதை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.