பல வருடம் இருக்கும் சைனஸ் பிரச்சனையை ஒரே வாரத்தில் நிவர்த்தியடைய செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

0
191
#image_title

பல வருடம் இருக்கும் சைனஸ் பிரச்சனையை ஒரே வாரத்தில் நிவர்த்தியடைய செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

மக்களில் பலரும் அவதிப்படும் உபாதைகளில் சைனஸ் பிரச்சனையும் ஒன்று. இந்த சைனஸ் ஆனது கண்களை சுற்றியும் மூக்கின் வலது மற்றும் இடது புறத்தை சுற்றியும் காணப்படும்.

இந்த வகையில் சைனஸ் வந்துவிட்டால் மாத்திரை என்பதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளி விடுகின்றனர்.

அவ்வாறு மாத்திரை சாப்பிடாமல் விட்டால் தொடர்ச்சியான தும்பல் சளி போன்ற அடுத்தடுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டி உள்ளது.

ஆனால் மருந்து மாத்திரை இன்றி எளிதான முறையில் இந்த சைனஸ் பிரச்சனையை சரி செய்யலாம். அந்த வகையில் இந்த பதிவில் வரும் ஆவி பிடிக்கும் முறையை பின்பற்றினாலே போதும் சைனஸ் பிரச்சனைக்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிட தேவையில்லை. உடனடி தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை

மஞ்சள் தூள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் கற்பூரவள்ளி இலையை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி போட வேண்டும். அவர் போட்ட பிறகு ஒரு தட்டை வைத்து மூடி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் வைத்த தண்ணீர் நன்றாக கொதித்ததும் கீழே இறக்கி ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நமது கண்களை சுற்றி மற்றும் மூக்கை சுற்றி உள்ள கழிவு நீர் வெளியேறும்.

இதனால் உங்களது சுவாசமானது சீராக இருக்கக்கூடும். அது மட்டும் இன்றி தும்மல் முக வீக்கம் என அடுத்தடுத்து சந்திக்க நேரிடும் சைனஸ் பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சைனஸ் பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடலாம்.