Connect with us

District News

சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!

Published

on

இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி அளவில் நடந்த சம்பவம் ஒன்று மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பதறிப்போய் உடனிருந்தவர் ஒருவர் அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் அந்த அம்மாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று சொல்ல , அந்த செவிலியர் ஆக்சிஜன் சரிபார்க்கும் கருவியை எடுத்துக் கொண்டு வந்து ஆக்சிஜனை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் போயுள்ளார்.

 

Advertisement

பின்பு மற்றொருவர் வந்து ஆக்சிஜன் அளவை பரிசோதித்து விட்டு எதுவும் சொல்லாமல் ஆக்சிஜன் அளவு 53 தான் இருக்கிறது என கூறி ஊசி போட்டு உள்ளார்கள்.

 

Advertisement

ஊசி போட்டும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க வில்லை. அதனால் உடனிருந்தவர் பதறிப்போய் மருத்துவர்களை அழைத்து வாருங்கள் என கெஞ்சியுள்ளார்.

போய் டாக்டரை அழைத்து வருகிறேன் என்று கூறி சென்றவர்கள் யாரும் வரவில்லையாம். மறுபடியும் சென்று கூறியதற்கு பின்னும் ஆக்சிஜன் கருவியை எடுத்து வந்து பரிசோதித்துவிட்டு சென்று விட்டார்களாம்.

Advertisement

 

அருகிலிருந்தவர் போய் கேட்கையில் அங்கு உள்ள மருத்துவர்களைச் கேட்கும் பொழுது, அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற முடியாது வேண்டுமென்றால் கூட்டிப் போகச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

Advertisement

 

ஐசியூ, வென்டிலேட்டர் என எவ்வளவோ சிகிச்சை இருந்தும் அது எல்லாம் பண்ண முடியாதா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொஞ்ச நேரத்தில் உயிர் போய்விடும் அதை எல்லாம் பண்ண முடியாது போங்க சார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

 

நாடி இருக்கே காப்பாற்ற முடியாதா என கதறி உள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போய்விடும் அந்த ஆக்சிஜன் மாஸ்க் எடுத்துவிட சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு என்ன சார் இப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு ,நான் என்ன சார் பண்றது, போங்க சார், என்று பதில் சொல்லி போக சொல்லியுள்ளார்.

Advertisement

 

அவர் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே அந்த அம்மாவின் உயிரும் பிரிந்து விட்டது.

Advertisement

 

தான் சொந்த செலவில், ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்கும் எவ்வளவோ கஷ்டப்பட்டு நிலைமையிலும் , ஏழைகள் எவ்வளவோ உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த மாதிரியான செயல்கள் தான் அரசு மருத்துவமனைகள் மீதும் மருத்துவர்கள் மீதும் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்குகிறது.

Advertisement

 

அன்புக்குரியவர்களை இழக்கும் தருணம் மரண வலியை விட கொடுமையானது என்று அவர்களுக்கு புரியுமா என்று தான் தெரியவில்லை.

Advertisement