அமைதிகாக்கும் எண்ணெய் நிறுவனங்கள்! பயங்கர குஷியில் வாகன ஓட்டிகள்!

0
67

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

ஆனாலும் ஜூன் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நோய் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் எழுதுவதற்கு திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர். இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய தினம் சென்னையில் 5ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.