Connect with us

Cinema

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

Published

on

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக தற்போது பேசப்படும் விவாதம் ‘திரௌபதி” என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகும் முழுக்க முழுக்க மக்களிடம் நிதி பெற்று ஒரு திரைப்படத்தை எடுத்து தமிழக அளவில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி அவர்கள்,

Advertisement

வடமாவட்டங்களில் திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, பெற்றவர்களின் கையில் பேரம் பேசி பணம் பெறும் கொடூரமான கும்பலின் முகத்திரையை கிழிக்கும் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் தமிழகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றது,.

திரெளபதி ட்ரெய்லர் வெளியான 3 நாட்களில் சுமார் 25 லட்சம் பேர் டிரெய்லரை யூடியூப் மூலமாக பார்த்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக ட்ரெய்லர் பரவியதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வையாளர்கள் திரௌபதி திரைபடத்தின் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்,.

Advertisement

இச்சூழ்நிலையில் நாடக காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தாக்கிய ஒரு சில வசனங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன,. திருமாவளவன் போல் டிரைலரில் ஒரு உருவம் காட்டப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரெளபதி டிரெய்லருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருமாவளவனை சந்தித்த செய்தியாளர்கள் திரெளபதி திரைப்படத்தில் உங்களையும் உங்கள் கட்சியினரையும் சார்ந்து இருப்பதால் நீங்கள் என்ன கருத்து தெரிவிக்கிறிர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எதுவும் பேசாமல் குடியுரிமைச் சட்டத்தை பற்றி பேசி செய்தியாளர்களை திசை திருப்பினார்., அவர் முகத்தில் குற்றம் புரிந்த ஒரு கலக்கம் தெரிந்தது.

Advertisement

செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:

Advertisement
Continue Reading
Advertisement