ரூ.80,000 சம்பளத்தில் சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

0
168

பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கும், அனுபவம் பெற்றவர்களுக்கும் ரூ.80,000 சம்பளத்தில் பணியமர்த்த சென்னை துறைமுக ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

1) நிறுவனம்:

சென்னை துறைமுக ஆணையம்

2) இடம்:

சென்னை

3) பணிகள்:

– senior personnel officer (Dy .Hod )
– Deputy chief Engineer(Dy .Hod )

4) பணிகளுக்கான வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 42க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

5) கல்வித்தகுதிகள்:

– senior personnel officer (Dy .Hod ) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

– Deputy chief Engineer(Dy .Hod ) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சிவில் பிரிவில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும் மற்றும் படிப்புக்கு தொடர்புடைய பணியில் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6) சம்பளம்:

நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆஃப்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி உங்கள் விவரங்கள் நிரம்பிய விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

SECRETARY,
CHENNAI PORT AUTHORITY,
RAJAJI SALAI,
CHENNAI-600001.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

02.01.2023

 

author avatar
Savitha