தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு

0
104

தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு

 

தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தில் காலியாக இருக்கும் 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 8,000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 

தற்போதைய நிலையில் தமிழக மின்சார வாரியத்தில், ஏறக்குறைய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்நிலையில் அதில் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தேர்வு நடைமுறை நிலுவையில் உள்ளதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது.

 

அதே சமயம் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விரைவில் தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.