தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

0
78

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் சுற்று பயணமாக சீன சென்றுள்ளார். அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து சீனாவிடம் விவாதம் நடைபெற்றது.

பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் எதிர்கட்சிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் அதிபர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சமீபத்தில் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் என்றார். ஐ.நா ஒப்பந்தத்தை தகர்க்கும் செயல் ஆகும்.

மேலும் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் சீனா சென்று பேச்சு வார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு சீனா அமைச்சர்களை சந்தித்து காஷ்மீர் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, இந்தியாவின் எல்லைகளுக்கோ அல்லது சீனாவின் எல்லைக் கோட்டுப்பகுதிக்கோ எந்தவிதமான தவறுகளும் இந்த காஷ்மீர் விவகாரத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியா எல்லையில் கூடுதல் ஆகிரிமிப்பு உரிமை இந்தியா முன்னெடுக்கவில்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன தவறாக நினைத்து கவலைப்பட வேண்டாம் என ஜெய் சங்கர் கூறியதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சீனாவும் உறுதி அளித்துள்ளது. சீனா கூறியதாவது, அண்டைநாடுகளின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை மதிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.

இதில் என்ன சிறப்பு என்றால், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிறகு இதனை அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தற்பொழுது அண்டைநாடுகளின் உதவி இல்லாமல் நிற்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K