ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

0
56

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..!
72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் குழந்தைகள் தின பாதுகாப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கிறார்.

மேலும், அதிமுக வின் தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக கட்சியின் அமைச்சர்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகஜெயலலிதா இவரின் பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அதிமுக அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையில் வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசியலில் தனித்துவமான அரசியலை செய்தவர்.

எம்ஜிஆருக்கு பிறகு அதிகமு வை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்த புரட்சி தலைவியாக இருந்தார். இவருக்கு பெண்களிடையே பெருமளவு ஆதரவு இருந்தது. அரசியல் வரலாற்றில் ஆளுமையின் அடையாளமாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா என்பது கடந்தகால வரலாறாகும்.

author avatar
Jayachandiran