ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

0
245

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு என்றும் முதல்வர் சொல்லி தான் அவர் இப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு. ஊழலில் திளைத்த ராசா மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். எதிர்க்கட்சிகளிடம் தான் தன்னுடைய சர்வாதிகாரத்தை அவர் காட்டி வருகிறார் . தனது கட்சிக்காரர்களிடம் அதை காட்டுவதே இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது, சிறையில் தள்ளுவது போன்றவற்றை அவர் செய்துகொண்டிருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் விடுதலைப் போராட்ட வீரர். சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் . அவரை கொச்சைப்படுத்துவது சரியா? இதையெல்லாம் பார்க்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சிகளை மதிக்காத ஒரு அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது என்று பேசினார்.

காமராஜர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, காங்கிரஸ் கட்சி ஜால்ரா கட்சி. திமுகவிற்கு பக்க வாத்தியமாக செயல்பட்டுவருகிறது. சூடு சொரணை உள்ளவர்கள் பேசுவார்கள். அவர்களுக்கு அது இருப்பதாக தெரியவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எங்கள் ஆட்சியின் சாதனை மக்களுக்கு நன்றாக தெரியும் . அதை மனதில் வைத்து மக்கள் ஓட்டு போடுவார்கள் எனவும் முன்னார் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அப்போது இரட்டை இலை வெற்றி பெறாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொன்னது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் வாய்க்காலை தாண்ட வக்கு இல்லாதவர்கள் கடலை பற்றி பேசக்கூடாது என்று கடுமையாக சாடினார்.

author avatar
Parthipan K