ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

0
161
#image_title

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜேக்கி ஷெரூப், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ஜெயிலர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது தொடர்பாக புகைப்படங்களை வெளியிட்டு “ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தியேட்டரில் சந்திப்போம்”என்று பதிவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.