விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

0
94
Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!
Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் தற்போது தேசிய சேமிப்பு நமக்கு நாளடைவில் பெரிதாக பயன்படும் என்பதை நம் அனைவரும் உணர வேண்டும்.

அந்த வகையில் திட்டத்தை பயன்படுத்தும் விவசாயிகள் அவர்களது ஓய்வு காலத்தில் மாதம் ரூ 1000 வரை பெற்றுக்கொள்ள முடியும்.அந்த வகையில் இந்த பென்ஷனை பெறுவதற்கு முதலில் 18 வயது முதல் 45 வயது ஆக இருக்க வேண்டும்.18 வயது உள்ள விவசாயிகள் முதலில் மாதம் தோறும் அவரது கணக்கில் ரூ 55 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பதினெட்டு வயதில் மாதம் ரூ 55 செலுத்தாமல் இருந்தால் அவருடைய 30 வயதில் இந்த திட்டத்தை தொடங்குபவர்கள் மாதந்தோறும் ரூ .1000 செலுத்த வேண்டும்.

இவ்வாறு செலுத்தி வரும் பொழுது அந்த விவசாயிக்கு 60 வயது ஆகும் பொழுது அவரது ஓய்வு காலத்தில் மாதம் தோறும் ரூ 3 ஆயிரம் வரை பென்ஷன் வாங்கிக்கொள்ள முடியும்.இந்த விவசாயிகள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ரூ 55 முதல் ரூ 200 வரை அந்த பென்ஷன் தொகைக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பென்ஷன் இணைப்பை பெறுவதற்கு ஆதார் அட்டை , பேங்க் பாஸ் புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தால் உடனடியாக அப்ளை செய்து இணைத்துக் கொள்ளலாம். இதனை அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள் அவர்களது ஓய்வு காலத்தில் பென்ஷன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.