தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

0
118

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில பகுதிகளில் 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதேபோல ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளை கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உதகை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாளைய தினம் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதே போல கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை மறுநாள் புதுச்சேரி தமிழ்நாடு அரசு மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

வரும் 9-ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.