ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

0
116

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

பிஎஸ்எல்வி ராக்கெட் 26 ஆம் ஆண்டு பயணத்தில் 1.1 டன் எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு அதன் செயல் திறனை அதிகப்படுத்த பட்டுள்ளது வெற்றிகரமான இந்த பயணத்தில் இஸ்ரோவில் இதற்கு முன் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு உண்டு அதனால் மாதவன் நாயர் சீனிவாசன் உட்பட முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து பாராட்டுகிறேன் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டின் மொத்த எடை 56 சதவீத எடை வெளி நாடுகளின் செயற்கைக்கோள்கள் கொடுக்கப்பட்டது இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை நிலவுக்கும் செவ்வாய்க்கும் செயற்கைக்கோள்களை கொண்டு சென்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் முடிந்தன விரைவில் சூரியனுக்கு வெளிப்புறப் பகுதியில் ஆராய்வதற்கான ஆதித்யா ஏவப்படவுள்ளது உள்ளது. இதுவும் pslv ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது.

அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

author avatar
CineDesk