அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

0
189
Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!
Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் என் தந்தை அமைச்சர் சேகர்பாபுவின் தூண்டுதலின் பேரில் எனது கணவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கமிஷனர் மற்றும் டிஜிபி-க்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

எனது தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாக இருப்பதால் என் தந்தை சொல்வதை தான் இன்ஸ்பெக்டர்கள், கமிஷனர் மற்றும் டிஜிபி ஆகியோர் கேட்கிறார்கள். நான் கர்ப்பிணியாக இருந்தும் கூட மனசாட்சி சிறிதும் இல்லாமல் என்னையும் என் கணவரையும் ஊர் ஊராக அலைய விட்டனர்.

எனது கணவரின் தோழியை மிரட்டி பொய் புகார் அளிக்க வைத்துள்ளனர். அந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் என் தந்தையின்  ஆதரவாளர்கள் அந்த பெண்ணிடம் அரசு பணி வாங்கி தருவதாக கூறி பேரம் பேசியுள்ளனர்.

 அந்த பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து, எனது கணவருக்கு எதிராக பேச வைத்து புகார் அளிக்க வைத்துள்ளனர். அதற்கான ஆதரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணி கூறியுள்ளனர்.

சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி கூறும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கே சென்று ஆதரங்களை வழங்க போவதாகவும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்  என்ற நம்பிக்கை தனக்கு  உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அமைச்சரால் அவரது மருமகனுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன சென்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
Parthipan K