அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

0
97
Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?
Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர்.

ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்குள்ள இடத்திற்கு சென்ற போலீசார்கள் சடலமாக கிடந்த குழந்தையை கைபற்றி கட்டைப்பையில் எடுத்து வந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கான காரம் யார்?என்பதை போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் அதே பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை தான் இந்த ஆண் குழந்தை என விசாரணையில் தெரிய வந்தது.மேலும் அந்த மாணவியை கண்டு பிடித்த போலீசார்கள் அவரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இதற்கு காரணம் மாணவியின் உறவினர் தான் என்பது தெரியவந்தது.அதன்படி சம்வத்தன்று  மாணவிக்கு வயிற்று வலி அதிகம் ஏற்பட்டதாகவும் அதனால் கழிவறைக்கு சென்ருள்ளார். தீராத வயிற்று வலி காரணமாக மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பின் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையை கழிவறைக்கு பின்னல் போட்டு விட்டு சென்றிருப்பது விசாரணை மூலம் தெரிந்தது. 11ஆம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவனை போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வீட்டில் இருந்த மாணவியை போலீசார்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மாணவியும் மற்றும் மாணவனும் 18 வயதிற்குக் குறைவாக உள்ள சிறுவர்கள் என்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K