கொஞ்சநாள் சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு… சமந்தா பற்றி கிளம்பிய வதந்தி

0
82

கொஞ்சநாள் சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு… சமந்தா பற்றி கிளம்பிய வதந்தி

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்தில் சென்றுள்ளது. அடுத்தடுத்து படங்களில் பிஸியாகியுள்ள சமந்தா படங்களில் நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்கள் நல்ல கவனத்தைப் பெற்றன. அதுமட்டுமில்லாமல் சமந்தா இப்போது தனி நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். ஷாகுந்தலம் மற்றும் யசோதா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வந்த சமந்தா திடீரென்று தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பதிவேற்றவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே தோல் சம்மந்தமாக சில பிரச்சனைகள் இருந்த நிலையில் இப்போதும் அந்த பிரச்சனையால்தான் ஷோசியல் மீடியாவில் புகைப்படங்களைப் பதிவேற்ற வில்லை என்று வதந்திகள் கிளம்பியுள்ளன. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமந்தா நடிக்கும் ஷகுந்தலம் திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.