மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்!

0
100

மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்தும் ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் ரிலீஸாகி எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் – மணிரத்னம் ஒரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் இசை நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் மணிரத்னம் தனக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை எனவும் ரஜினிகாந்த் பேசியது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிப் படம் கொடுக்காமல் இருந்த மணிரத்னமும் பொன்னியின் செல்வன் மூலமாக ஏகோபித்த வெற்றியைப் பெற்றுள்ளார்.