சீரற்ற மாதவிடாயா? ஒரே இரவில் வர இதனை குடியுங்கள்!

0
164

சீரற்ற மாதவிடாயா? ஒரே இரவில் வர இதனை குடியுங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறையின் காரணமாகவும் பெண்கள் சரியாக உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பதினால் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மாதவிடாய்.

மாதந்தோறும் மாதவிடாய் சீராக வந்தால் மட்டுமே பெண்களின் உடலில் எந்த ஒரு வியாதிகளும் ஏற்படாது. சீரற்ற மாதவிடாய் என்றாலே உடலில் பல பாதிப்புகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மாதவிடாய் வராதவர்களுக்கு ஒரே இரவில் எப்படி அதனை வர வைக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுக்க வேண்டும். அதனுடன் 200 மிலி தண்ணீர் சேர்க்க வேண்டும். மேலும் இரண்டு டீஸ்பூன் கருப்பட்டி அல்லது வெள்ளம் சேர்க்க வேண்டும். வெள்ளத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் தான் மாதவிடாய் சீரற்று காணப்படும். அதனால் வெள்ளம் சிறந்த மருந்தாக அமைகிறது. சிலருக்கு ரத்த சோகை இருந்தால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படும். அதற்கு வெள்ளம் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

ஏழு நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விட வேண்டும். நாம் சேர்த்துள்ள 200 மில்லி தண்ணீர் ஆனது 150 மிலி அல்லது 100 மிலி என குறைய வேண்டும். அதன் பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது இரவு தூங்க செல்வதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

குறிப்பாக 5 மாதம் 3 மாதம் மாதவிடாய் வரவில்லை என்றால் இதனை இரவு ஒரு முறை மற்றும் காலை ஒருமுறை குடிக்க வேண்டும். இதனை எப்பொழுது குடித்தாலும் தயாரித்த உடனே குடிக்க வேண்டும்.

 

author avatar
Parthipan K