ஐ.பி.எல். தொடருக்கு முன் இந்த போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள்

0
66

இந்தியாவில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்து அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர். அமீரகம் சென்றதும் அனைத்து அணிகளும் தங்களது 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் அதில் 3 முறை (1, 3, 6-வது நாளில்) கொரோனா பரிசோதனையை முடித்து கடந்த வாரத்தில் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

இந்த நிலையில் மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமாக போட்டி விளையாட்டில் விளையாடவில்லை இதனால் ஒன்றிரண்டு வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன. முன்னணி அணியின் நிர்வாகி ஒருவர் ‘‘சில வார்ம்-அப் மேட்ச்கள் தொடருக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார். மற்றொரு அணியின் சிஇஓ ‘‘வார்ம்-அப் போட்டிகளுக்கு என்னுடைய 100 சதவீதம் ஆதரவு உண்டு’’என்றார்.

author avatar
Parthipan K