ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி அபார வெற்றி!

0
86

ஐபிஎல் 15வது சீசன் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றி பெற்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே,ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார், ராபின் உத்தப்பா 1 ரன்னில் ஆட்டமிழந்தார் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கினார்கள்.

சென்னை அணியின் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடினார், இன்னொருபுறம் களமிறங்கிய வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்த நிலையில், வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு அனுப்பி தோனி தன்னுடைய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

9 விக்கெட்டுகளை இழந்ததால் 15 ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுக்க முயற்சி செய்து தோனி ஓடினார். ஆனால் அதில் எதிர்முனையில் இருந்த முகேஷ் சவுத்ரி ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசியில் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 36 ரன்களை சேர்த்தார். மும்பை அணியின் டேனியல் சாங்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷன் கிஷன் உள்ளிட்டோர் 6 ரன்னிலும், ரோஹித் சர்மா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த டேனியல் சான்ஸ் 1 ரன்னிலும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர.

, ஒருகட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அதன் பிறகு வந்த திலக் வர்மா நிலைத்து நின்று விளையாடி 34 ரன்களை சேர்த்தார்.

இதன் காரணமாக மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்தது இதன் காரணமாக, 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.