சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

0
113
#image_title

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார்.

நேற்று மதியம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆகிய வீரர்களின் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த சுனில் நரைன் 15 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்திலும், மந்தீப் சிங் 15 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 15 டக் அவுட் ஆகி மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா 16 வது முறையாக டக் அவுட் ஆகி அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து மோசமான சாதனையை பிடித்துள்ளார்.