ஐ.பி.எல். தொடர் நாளை அறிவிக்க போகும் உற்சாகமான செய்தி

0
669

இந்தியாவில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்து அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர். அமீரகம் சென்றதும் அனைத்து அணிகளும் தங்களது 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் அதில் 3 முறை (1, 3, 6-வது நாளில்) கொரோனா பரிசோதனையை முடித்து கடந்த வாரத்தில் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன. ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

 

author avatar
Parthipan K