ஐபிஎல் போட்டி வாழ்வா சாவா? மும்பையை சந்திக்கும் சென்னை அணி!

0
64

நோய் தொற்று காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட 14-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டங்கள் எதிர்வரும் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. சென்ற வருடத்தைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்ற இந்த போட்டிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டும் தான் இருக்கிறது என்ற காரணத்தால், அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் ஆகிவிட்டன. வெளிநாட்டு வீரர்களும் அணியுடன் இணைந்து வருகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் மோத இருக்கின்றன. இந்த அணிகள் மோதும் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் போல மிகவும் வெறுப்பாக காணப்படும் என்ற காரணத்தால், முதல் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது இந்த தொடரின் முதல் பகுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்று இருந்தது. ஆகவே இதற்கு பழிவாங்கும் விதத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி இருக்கிறது, அதோடு முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று மும்பை அணியும் ஆர்வமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த தொடரில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் டுவைன் பிராவோ மற்றும் டூ ப்ளஸஸ் ஒரு காயத்தின் காரணமாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று இருந்த சமயத்தில் பிராவோக்கு காயம் உண்டானது. அவர் குணமடைந்து மறுபடியும் போட்டிக்கு திரும்பிவிட்டார், ஆனாலும் காயத்தின் காரணமாக, இதுவரையிலும் ஒருவர்கூட பந்துவீச்சை இயலாமல் இருக்கின்றார். அதேபோல கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் அசுரத்தனமான பேட்டிங் பார்மில் இருந்த டூ ப்ளஸஸ் அவர்களுக்கு காயம் உண்டானது. அவருக்கு தற்போது சிகிச்சை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆகவே முதல் சில போட்டிகளில் இவர்கள் இருவரும் விளையாடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது. அதேபோல பிளே ஆப் சுற்றில் சென்னை அணிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் மோயின் அலி, சாம் கரண் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ப்ளே ஆப் சுற்றுக்குகளின் போது அவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியுடன் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய இந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி காம்பேக்ட் கொடுத்திருக்கிறது. இந்த தொடரில் இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இருந்தாலும் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அனைவர் மத்தியிலும் உண்டாகியிருக்கிறது.