">
News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள்  | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
  • முகப்பு
  • அரசியல்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
    • உடல்நலம்
  • ஆன்மிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
    • உடல்நலம்
  • ஆன்மிகம்
No Result
View All Result
News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள்  | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
No Result
View All Result
Home State

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

AMS by AMS
October 23, 2020
in State
0
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter
Follow us on Google News

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

 

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னிய சமுதாயத்துடன் சேர்த்து மேலும் 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதில் வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் பிரதிநிதித்துவம்: ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்க வேண்டும்!” என்று கேட்டு கொண்டுள்ளார்.மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது.

 

மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டுமானால், அந்த சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அது தான் சமூக நீதியின் அடிப்படை ஆகும். ஆனால், வன்னியர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தமிழக ஆட்சியாளர்கள் கடந்த 40 ஆண்டுகளாக காதில் வாங்காமல் கடந்து செல்வது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் என்றால் வன்னியர்கள் தான். தமிழ்நாட்டு மக்கள்தொகையில் வன்னியர்களின் பங்கு 25 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். ஆனால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாக இருந்ததால் தான், 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் சாலைமறியல் போராட்டத்திற்குப் பிறகு 1989-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காது என்று எதிர்ப்பு தெரிவித்தும், அதை அப்போதைய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமல் எங்கள் மீது திணித்தனர். அதன்பின் 31 ஆண்டுகள் ஆகியும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதை கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை. காரணம்…. வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியும், துரோகமும் அம்பலமாகி விடும் என்று அஞ்சினார்கள். தகவல் அறியும் உரிமைப்படி இந்த விவரங்கள் கோரப்பட்டும் அவை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு சமுதாயமும் இட ஒதுக்கீட்டால் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளன என்பதை அறிய இவ்விவரங்கள் மிகவும் அவசியம். ஆனாலும், அவற்றை அரசுகள் மூடி மறைக்கின்றன.

 

2019-ஆம் ஆண்டில் அதிமுகவும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்த போது. 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அதன்பிறகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஓரிரு முறை நானும், பாட்டாளி மக்கள் கட்சிக் குழுவினரும் நேரில் சந்தித்த போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், இன்று வரை அக்கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் பரிசீலனைக்குக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

 

அண்மையில் இணையவழியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களின் போதும், சுக்கா… மிளகா…. சமூகநீதி? நூல் வெளியீட்டு விழாவின் போதும் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்தும், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

 

ஆரோக்கியமான சமூகநீதி என்பது அதன் விளைவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்வது தான். 1969-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூகநீதி கிடைத்துள்ளதா? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைத்து சமுதாயங்களும் பயனடைந்துள்ளனவா? என்பதை ஆராய நீதிபதி ரோகிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் இறுதி பரிந்துரை அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

 

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யவும், அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யவும் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டு குளறுபடிகளால் பாதிக்கப் பட்டது பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற ஐயம் தான்.

தமிழ்நாட்டில் 20% இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக 21 உயிர்களை இழந்தது உள்ளிட்ட ஏராளமான தியாகங்களை செய்தவர்கள் நாங்கள். அவ்வாறு போராடிப் பெற்ற சமூகநீதியில் யார், யாருக்கு எவ்வளவு பலன் கிடைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. எனவே மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 19% இட ஒதுக்கீடு தவிர, மீதமுள்ள 81 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

 

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையம் அதன் அறிக்கையை திசம்பருக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பு உள்ளிட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய அரசு தயங்கினால் பாட்டாளி மக்களைத் திரட்டி, தொடர் சாலைமறியலை விட கடுமையான போராட்டத்தை நடத்துவதைத் வேறு வழியில்லை என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram

Related

உடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்
Tags: Dr RamadossPMKஇட ஒதுக்கீடுஇட ஒதுக்கீடு போராட்டம்மருத்துவர் ராமதாஸ்
AMS

AMS

Related Posts

Rental of this type of vehicle has been raised! Notice of Action!
Business

இந்தவகை வாகனங்களின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது! அதிரடி அறிவிப்பு!

March 4, 2021
Secret meeting at the hotel! Who is the next Chief Minister?
Politics

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

March 4, 2021
Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?
Politics

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

March 4, 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About Us

News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள்  | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil

News4 Tamil

No.1 Best Online News Channel

News4 Tamil provides latest updates from State,National,World,Political,Cinema,Sports,Business and Technical areas

Recent News

  • இந்தவகை வாகனங்களின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது! அதிரடி அறிவிப்பு! March 4, 2021
  • ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்? March 4, 2021
  • தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! March 4, 2021

Categories

  • Beauty Tips
  • Business
  • Cinema
  • Crime
  • Culture
  • District News
  • Editorial
  • Education
  • Health Tips
  • Job
  • Life Style
  • National
  • News
  • Opinion
  • Politics
  • Religion
  • Sports
  • State
  • Technology
  • Travel
  • Uncategorized
  • World

[mc4wp_form]

© 2018 News4 Tamil-No.1 Best Online Tamil News Channel in the World.
We are providing latest updates from State,National,World,Political,Sports,Cinema,Business and Technology areas.

No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
    • உடல்நலம்
  • ஆன்மிகம்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Go to mobile version