சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை!

0
177
Information released by Chennai Meteorological Department! Thunderstorm in next 3 hours!
Information released by Chennai Meteorological Department! Thunderstorm in next 3 hours!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை!

கடந்த டிசம்பர் மாதத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நிலை கொண்டது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தால் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது.

அதனை தொடர்ந்து கடந்த  ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரங்களில் இருந்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில்  அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடை மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K