அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி…! அதிமுகவில் உட்கட்சி பூசலா…!

0
58

அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களுக்கு முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கின்றார்.

கொரோனா ஆய்வு மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விராலிமலை பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் இந்த நிலையில் முதல்வரை சந்திப்பதற்காக திருச்சி விமானநிலையத்திற்கு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களை அதிமுகவினர் அவமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதிக்கு முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப் படுவதாகவும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகின்றது.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி அவர்கள் முதலமைச்சரை சந்திக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அனுமதித்தனர் ஆனால் என்னை மட்டும் அனுமதிக்கவில்லை நான் என்ன செய்வது சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக என்னை காக்க வைத்திருந்தனர் என்ன காரணத்திற்காக நான் முதல்வரை சந்திக்க கூடாது என்று தடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை இதுபற்றி முதல்வரை நேரில் சந்தித்து உரையாடுவேன் அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நேரம் வரும் போது என் மனதில் உள்ள எங்களை கட்டாயம் வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.