நோய்த்தொற்று பரவல்! நேற்றைய பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

0
94

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,35,255 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 13,753 ஆண்கள் 9,690 பெண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,443 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 ,8591 பேரும், செங்கல்பட்டில் 2236 பேரும், கோயமுத்தூரில் 2042 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக திண்டுக்கல்லில் 52 பேரும், பெரம்பலூரில் 42 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று வெளி மாநிலங்களில் இருந்து வந்த 22 பேர் உட்பட 12 வயதிற்கு உட்பட்ட 697 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 3598 பேருக்கும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரையில் தமிழ்நாட்டிற்கு வந்த 32 , 288 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களில் 381 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தற்சமயம் வரையில் 29 மாவட்டங்களில் 240 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரையில் 21,63,366 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,11,779 குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட 4,28 ,717 முதியவர்களும் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

நோய்தொற்றுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும், என்று 20 பேர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் பலியாகி இருக்கிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 10 பேரும், மதுரை மற்றும் திருவள்ளூர், தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 பேரும், கோயமுத்தூர், ஈரோடு, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் திருச்சியில் தலா ஒருவரும் என்று 9 மாவட்டங்களில் உயிரிழப்பு உண்டாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 37 ஆயிரத்து 9 பேர் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 13,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6124 பேரும், செங்கல்பட்டில் 1597 பேரும், திருவள்ளூரில் 954 பேரும் அடங்குவர். இதுவரையில் 27,74,009 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,52,348 ஆக இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.