ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

0
62

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ள இந்தியா 347 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். கடைசியாக வந்த கேதார் ஜாதவ்வும் அதிரடியில் களமிறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி  50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது. ராகுல் அவுட்டாகமால் 87 ரன்களும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியுசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்களும், காலின் டி கிராண்ட்ஹொம் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். கேன் வில்லியம்சன் இல்லாமல் களமிறங்கியுள்ள நியுசிலாந்து அணி இமாலய இலக்கை துரத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
Parthipan K