ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி!

0
77

ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி டி 20 தொடரை முடித்து விட்டு தற்போது ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.

இன்று மதியம் 1.30 மணிக்கு லக்னோவில் வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது.  தென் ஆப்பிரிக்கா கடைசி ஒருநாள் போட்டியில் வென்று வலுவாகியுள்ளது. மேலும் டி 20 தொடரை இழந்துவிட்ட நிலையில் ஒருநாள் தொடரையாவது வெல்ல கடுமையாக போராடும். வலிமையான இந்த அணியை இளம் வீரர்கள் உள்ள இந்திய அணி தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்திய உத்தேச அணி

ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்

தென் ஆப்பிரிக்கா உத்தேச அணி

குயின்டன் டி காக், ஜனேமன் மலான், டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா