இந்தியாவில் மளமளவென சரிந்த நோய்த்தொற்று பாதிப்பு!

0
66

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்சமயம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதன் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து நான்காயிரத்து534ஆக அதிகரித்து இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதி பலியாகி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த நோய் தொற்றுக்கு இதுவரையில் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 385 ஆக அதிகரித்து இருக்கிறது.

நோய் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 574 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 34 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். நாடு முழுவதிலும் இருக்கின்ற பல மருத்துவமனைகளில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 575 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் நேற்று வரையில் பொதுமக்களுக்கு எண்பத்தி ஒரு கோடியே 85 லட்சத்து 13 ஆயிரத்து 827 தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.