பெண்கள் தொழில்முனைவோருக்கு ரிசர்வ் வாங்கி செய்யும் உதவி: ?

0
73

நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் தொழில்களும், பொருளாதார பணம்பூலக்கமும் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வங்கி உதவி செய்ய வேண்டும்.தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றனர். இதனால் தனிமனிதனின் வாழ்க்கை உயர்வதோடு , நாட்டின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இந்த காலத்தில் வேலை செய்வதைவிட வேலை தேடுவதே கடினமாக உள்ளது.இப்பொழுது தொழில் தொடங்குவது மிகவும் பாதுகாப்பானது என்றும் மக்களிடையே பெண்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. விவசாயம் ,சிறு குறு தொழில்கள், கட்டுமானம் ,புதுப்பித்தல் போன்ற செயல்பட்டுக்கு பெண்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.இந்த வகை தொழில்முனைவோருக்கு வங்கிக்கணக்கில் எட்டாக்கனியாகவே இதுவரை அமைகிருந்தது.

எனவே,பெண்கள் தொழில் முனைவோர்களுக்கு தொழில் கடன் வழங்க ஏதுவாக வாங்கி அமைய வேண்டும் என்றும் நொக்கில் சிறுதொகை தொழிலில் பயன்படும் என்றாலும் தயங்காமல் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.இதற்காக வங்கி கடனில் 5 சதவீதம் உயர்த்தி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 31,578கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடன் வழங்குவதை அதிகரித்ததன் மூலம் கடன் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

author avatar
Parthipan K