புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

0
185
#image_title
புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!
புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் மே 28ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டது. இகையடுத்து காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் “பாராளுமன்ற கட்டிட திறப்பா விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவும் இல்லை. ஜனாதிபதியைக் கொண்டு திறக்கப் போவது இல்லை. இது நாட்டின் மிக உயரிய பதவிக்கு கிடைக்கும் அவமதிப்பு ஆகும். புதிய பாராளுமன்றம் அகந்தையால் கட்டியது கிடையாது. புதிய பாராளுமன்றம் இந்திய அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டது ஆகும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.