மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

0
154
#image_title

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் சோதனை நடத்தினர்.

அம்ஜத்கானின் உடமைகளை சோதனையிட்ட போது அலுமினிய தாளில் சுற்றப்பட்ட 9 பிளாஸ்டிக் பைகளில் ஒன்றரை கிலோ ஜெல்லி மிட்டாய் வடிவில் ஹாசிஷ் என்கிற எண்ணெய் வடிவிலான போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த போதைப்பொருளையும், 76 ஆயிரத்து 939 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்ததுடன், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, அம்ஜத்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

author avatar
Savitha