இதை செய்த 5 நிமிடத்தில் உங்கள் சொத்தைப்பல் புழு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
215
#image_title

இதை செய்த 5 நிமிடத்தில் உங்கள் சொத்தைப்பல் புழு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

 

நமக்கு ஏற்படும் பல வலிகளில் கொடுமையான வலி என்றால் பல் வலி மட்டும்தான். இந்த பல் வலி வந்தால் நம்மால் ஒழுங்காக சாப்பிடக்கூட முடியாது. பல் வலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் எவ்வாறு பல் வலியை குறைக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

இந்த பதிவில் கூறப்படும் இந்த முறையை செய்து பார்த்தால் பல் வலி குறைவது மட்டுமில்லாமல் ஈறுகளில் ஏற்படும் வீக்கமும் குறைகின்றது. பற்களில் இருக்கும் புழுக்கள் வெளியே வந்துவிடும். பற்கள் சொத்தையாக இருந்தாலும் குணமாகும்.

 

இதை செய்ய தேவையான பொருள்கள்…

 

*கண்டங்கத்தரி விதை

* வேப்பெண்ணெய்

 

பல் வலியை ஒரு நொடியில் குறைப்பதற்கான வழிமுறை…

 

இதை செய்ய கண்டங்கத்தரிக் காய்களின் விதைகள் மட்டும் இருந்தால் போதும். பிறகு வேப்பெண்ணெய் 50 மிலி அளவு இருந்தால் போதும்.

 

முதலில் இரும்பு பொருள் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பினால் ஆன கடாய், அருவாள் எந்த பொருள் இருந்தாலும் சரி. இரும்பு பொருள் எடுத்து அதை நன்கு சூடுபடுத்தவும்.

 

இந்த இரும்பு பொருள் சூடாகும் பொழுது கண்டங்கத்திரி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் சிரட்டையை கண் உள்ள பகுதியாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் சிரட்டையில் ஒரு கண்ணை மட்டும் ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும்.

 

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சூடு செய்த இரும்புப் பொருளை இந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மீது வைக்க வேண்டும். பிறகு கண்டங்கத்திரிக் காயில் இருந்து விதைகளை தனியாக எடுத்து நன்கு சூடு செய்த இரும்பு பொருள் மீது வைக்க வேண்டும்.

 

பிறகு இதில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் வேப்பெண்ணெய் விட வேண்டும். வேப்பெண்ணெய் சேர்த்த பிறகு அதற்கு மேல் தேங்காய் சிரட்டையை வைக்க வேண்டும்.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

தேங்காய் சிரட்டையை வைத்த பிறகு அதில் ஓட்டை இருக்கும் இடத்தில் நமது வாயயை வைக்க வேண்டும். அதிலிருந்து புகை வரத் தொடங்கும். இந்த புகையை நாம் உள்ளே இழுக்கவும் கூடாது. இந்த சிரட்டையின் மேல் வாயயை வைத்தவுடன் உமிழ் நீர் சுரக்க ஆரம்பிக்கும். இந்த உமிழ் நீர் மூலமாகத் தான் வாயில் இருக்கும் புழுக்கள் வெளியேறும்.

 

இந்த புகையை மூக்கு வழியாக எவ்வளவு வேண்டுமானாலும் உள்ளே எடுத்துக் கொள்ளலாம். வாய் வழியாக இந்த மூச்சை இழுக்க கூடாது. முடியும் வரை புகையை வாய்க்குள் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும.

 

கீழே இந்த பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்கிறோம். அது எதற்காக என்றால் நம் வாயில் இருக்கும் புழுக்கள் எல்லாம் வெளியேறி அந்த தண்ணீரில் விழுகும். அதை நீங்கள் பார்க்கலாம். அதற்காகத்தான் இந்த தண்ணீரை கீழே வைத்திருக்கிறோம். இந்த முறையை செய்து பார்த்தால் ஒரு நொடியில் பல் வலி குணமாகும். வாயில் உள்ள கிருமிகள் வெளியேறும். ஈறு வலி, வீக்கம் எல்லாம் குணமாகும்.