வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

0
78

திருச்சி அருகே பெண் ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு வாலிபரோடு தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரின் வயது 44. இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை செய்யும் அபிஷேக் என்பவருக்கு இவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில் ஆஷா வேறொரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற போதிலும் அபிஷேக் அங்கு வந்து ஆஷா உடன் தன்னுடைய நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இவர்களுடைய நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் வீட்டிற்கு சொல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அபிஷேக் என்பவருக்கு 25 வயதாகும் நிலையில் கல்யாணம் முடிந்து மனைவியை பிரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் கள்ளக்காதல் பற்றியும் திருமணம் நடைபெற்றதையும் குமரவேலுக்கு தெரியாமலே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ஆஷாவை காணவில்லை என்று குமரவேல் பதறிப்போய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிறகு தான் அபிஷேகிற்க்கும் ஆஷாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என்று குமரவேலுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குமரவேல் போலீசில் புகார் அளித்துள்ளார். மனைவி இருக்கும்பொழுது அபிஷேக் ஆஷாவை திருமணம் செய்து கொண்டார். அதே போல் கணவனிடம் விவாகரத்து பெறாமலேயே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அபிஷேக்கை ஆஷா திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தனது மனைவி வேண்டும் என குமரவேல் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவரின் புகாருக்கு போலீசார் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். காரணம் அபிஷேக் ஒரு போலீஸின் மகன் என்பதால் இந்த மெத்தனப் போக்கு உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆஷாவை சந்தித்து குமரவேல் என்னுடன் வந்துவிடு என்று அவர் அழைத்துள்ளார். ஆனால் ஆஷா குமரவேல் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். என்னை விட அவருக்கு வயது வித்தியாசம் அதிகம் எனவும் அதை சொல்லாமல் திருமணம் செய்துகொண்டார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் எனக்கு அபிஷேக் தான் முக்கியம். குழந்தைகளை கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்துவிடு என்றும், மேலும் அப்படித் தராவிட்டால் நீதிமன்றத்தில் மூலம் குழந்தைகளை நான் பெற்று கொள்கிறேன் என்றும் குமரவேலுவிடம் அவர் சொல்லியுள்ளார்.

author avatar
Kowsalya