விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்! 

0
97
#image_title

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்! 

சாலைகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் புதிய ரக நவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசிதழில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதிய நடைமுறைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகளின் படி நாடு முழுவதும் உள்ள போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதிக வேகம், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கப்பட்டு விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்தே அபராதம் விதிக்க புதிய வசதியானது திட்டமிடப்பட்டுள்ளது.

, நேரம், இடம், தேதி ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது மொபைலில் குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ விதி மீறல்களுக்கு உரிய அபராதத்தொகையினை செலுத்தலாம்.

மேலும் ஏதாவது குற்றத்தின் போது வாகனத்தின் உரிமையாளர் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லை எனில் , அவர் அதற்காக காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், நிரபராதி என்று உரிமை கோரலாம். அவர் ஓட்டுநர் அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரத்தையும் சேர்த்து வழங்கலாம்.

அதற்கடுத்து மேலும் போக்குவரத்து பணியில் ஈடுபடும்  காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தை சீராக உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் மாநில அரசின் அரசிதழில் அச்சிடப்பட்டுள்ளது.