இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து!

0
91
Important information for these truck drivers! Failure to follow this will result in a fine of Rs 50,000 and license cancellation!
Important information for these truck drivers! Failure to follow this will result in a fine of Rs 50,000 and license cancellation!

இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிவு நீர் அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் சுகாதாரமற்ற நிலை உண்டாகிறது. இதனை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாகவே வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் பேரில் பழைய விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய விதிமுறைகள் அமல்படுத்த கோரி தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்தனர். கோரிக்கையை ஏற்று  புதிய விதிகளை தமிழக அரசு அமல்படுத்தியது.

அதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு புதிய முறையை அமல்படுத்தி உள்ளனர்.அதன்படி குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் என அனைத்திலிருந்தும் எடுக்கப்படும் கழிவுநீர் மற்றும் மலக்கசடு  போன்றவை உரிமம் இருந்தால் மட்டுமே அகற்ற வேண்டும். அவ்வாறு கட்டிடங்கள் , குடியிருப்புகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை நகராட்சி கூறும் இடங்களில் மட்டுமே திறந்து விட வேண்டும். விதிகளை மீறினால் 25 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

தற்பொழுது கூறிய விதிமுறைகளை மீறி கழிவு நீரை அனுமதிக்கப்பட்ட இடம் தவிர்த்து வேறு இடங்களில் திறந்து விட்டால் ஒரு 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல உரிமம் இல்லாமல் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டால் ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிப்பதோடு அதன் உரிமத்தையும்  இடைநீக்கம் செய்யவும் அனுமதி அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பணியில் ஈடுபட்ட  வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.