சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
104

சென்னை மாநகரத்தின்  2️2 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் செய்த கனமழையின் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் சென்ற அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி அதாவது நேற்று வரையில் 697.80 மில்லிமீட்டர் வரையில் மழை பெய்திருக்கிறது. அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 இடங்களில் 750 பகுதிகளில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மீதம் இருக்கக்கூடிய பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி நடந்துவருகின்றது சென்னையில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய இருபத்தி இரண்டு சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு அந்த பாதைகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று வடகிழக்கு பருவமழை மன்னிப்பு சென்னை பெருநகர வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரத்தை சென்னை போக்குவரத்து காவல் துறை குறிப்பிடப்படவில்லை மழை நீர் பெருக்கு காரணமாக, செய்யப்பட்ட இருக்கக்கூடிய போக்குவரத்து மாற்றத்தின் படி பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தியாகராயநகர் பசுல்லா சாலையில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரை வெளியேற்றும் பணியை செய்து வருகிறார்கள். இதனால் ஜிஎஸ்டி சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை, அபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்பட்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.